போடி அருகே போதை வஸ்துக்கள் பயன்படுத்திய 3 இளைஞர்கள் கைது!

தேனி மாவட்டம் சிலமலை பகுதியில் உள்ள சுடுகாட்டில் இளைஞர்கள் ஒன்றுகூடி போதை வஸ்துகள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது போலீசாரை கண்டவுடன் ஓட்டம் பிடித்தவர்களில் சிலமலையைச் சேர்ந்த சுஜித்குமார், திவின்குமார், தங்கதமிழ்வாசன் ஆகியோர் மட்டும் பிடிபட்டனர். 3 பேரும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச்செய்யும் மருந்தை போதை ஊசியாக பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார் தப்பிச்சென்ற மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

Exit mobile version