சென்னையில் பள்ளிக்குள் புகுந்து 3 வயது சிறுவன் கடத்தல்

சென்னையில் பள்ளிக்குள் புகுந்து கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் 14 மணி நேரத்தில் அதிரடியாக மீட்கப்பட்டான்.

சென்னை பட்டாளத்தில் வசித்து வருபவர்கள் பிரகாஷ்- துர்காதேவி தம்பதி. இவர்களது 3 வயது மகன் அஜய், அருகில் உள்ள மாநகராட்சி பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தான்.

இதனிடையே மாலை பள்ளிக்கு வந்த 2 பெண்கள், சிறுவன் அஜயின் உறவினர்கள் என்று கூறி அவனை அழைத்துச்சென்றுள்ளனர். சற்று நேரத்தில் அஜயின் பெற்றோர் பள்ளிக்கு வந்த போதுதான் அஜய் கடத்தப்பட்ட விசயம் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து துரித நடவடிக்கையில் இறங்கிய போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். இதில் இரண்டு பெண்கள் அஜயை தூக்கிச்செல்வது பதிவாகி இருந்தது.

இதற்கிடையே சிறுவனை கடத்தி சென்ற 2 பெண்களையும் கைது செய்துள்ள போலீசார் சிறுவனை மீட்டுள்ளனர். சம்பவம் நடந்த 14 மணி நேரத்திற்குள் சிறுவன் அஜய் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிறுவன் கடத்தல் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version