கோவை அருகே முட்புதரில் இருந்து 3 வயது சிறுமி சடலமாக மீட்பு

கோவையில் 3 வயது சிறுமி முட்புதர்களுக்கிடையே சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள முட்புதரில் 3 வயது சிறுமி சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி எதற்காக கொலை செய்யப்பட்டார் என காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்

Exit mobile version