விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்கள், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தில் விபத்தில் சிக்கின !

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 2 விமானிகளுடன் சுகோய் 30 மற்றும் ஒரு விமானியுடன் மிராஜ் 2000 ஆகிய விமானப்படை விமானங்கள் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றன. இந்நிலையில், மொரேன என்ற இடத்தில், இரண்டு விமானங்களும் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் தப்பிய நிலையில், ஒரு விமானியை தேடும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே உஜ்ஜெயின் பகுதியில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விமானத்தில் இருந்த பயிற்சி விமானிகளின் நிலை குறித்து இதுவரை தகவல் வெளியாகிவில்லை. பனிமூட்டம் காரணமாக, இந்த 2 விபத்துகளும் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Exit mobile version