ரியல் எஸ்டேட் வியாபாரியிடம் துப்பாக்கி முனையில் ரூ. 20 லட்சம் கொள்ளை

காஞ்சிபுரம் அருகே, துப்பாக்கி முனையில் 20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

குடியாத்தத்தை சேர்ந்த மணிகண்டன் அவரது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட், தங்க நகை அடகு வைப்பது உள்ளிட்ட தொழில்களை செய்து வந்தார். குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி அவரிடம் அறிமுகமான சிங்காரவேல் என்பவர், அதற்காக 20 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.

இதை நம்பிய மணிகண்டன், அவருடன் வேலூர் வந்தனர். விஷார் என்ற பகுதியில், அவர்களை வழிமறித்த சிலர், துப்பாக்கி முனையில் 20 லட்சம் ரூபாயை பறித்தனர். சிங்காரவேலனும் கொள்ளையர்களுடன் தப்பிச் சென்றார். சிங்காரவேலன் திட்டமிட்டு கொள்ளையை நடத்தியது தெரியவந்தது.

புகாரின் பேரில், விசாரணை நடத்திய காவல்துறையினர், சிங்காரவேல் உள்பட மூன்று பேரை கைது செய்தனர். 14 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி போலியானது என்பதும் தெரியவந்தது.

Exit mobile version