திருச்சி பாஜக பிரமுகர் கொலை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது

திருச்சி பாஜக பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பாபு என்கிற மிட்டாய் பாபுவை தனிப்படை காவல்துறையினர் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் வரகனேரியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் விஜயரகு கடந்த 27ம் தேதியன்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விஜயரகு கொலையில் முக்கிய குற்றவாளியான மிட்டாய் பாபுவை பூக்கடை காவல் நிலையம் அருகே தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மிட்டாய் பாபுவிடம் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர், மிட்டாய் பாபுவை திருச்சி மாநகர காவல்துறையினரிடம் தனிப்படை காவல்துறையினர் ஒப்படைத்தனர். மேலும். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முகமது யாசர், சுடர் வேந்தன், ஹக்கீம் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் திருச்சியில் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேரை தனிப்படை கவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், விஜயரகுவை கொலை செய்ய, ஐந்து பேரும் சேர்ந்து திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டுள்ளனர். விசாரணையைத் தொடர்ந்து, கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

Exit mobile version