உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் அமர்வு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தொடர்பாக எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 3 பேர் அடங்கிய அமர்வு விசாரிக்கவுள்ளது

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் பாலியல் தெந்தரவு புகார் கொடுத்தார். இதனை மறுத்த ரஞ்சன் கோகாய், இதற்கு பின்னால் மிகப்பெரிய சதி உள்ளதாக கூறினார்.

இந்நிலையில், மூத்த நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதி ரமணா மற்றும் பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்கவுள்ளனர்.

Exit mobile version