திருக்கோவிலூர் அருகே பழமை வாய்ந்த கோவிலில் ரூ.3 லட்சம் கொள்ளை

கள்ளக்குறிச்சியில் உள்ள திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள கீழையூரில் பழமை வாய்ந்த வீரட்டானேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவில் புகுந்த மர்ம நபர்கள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியை உடைத்து, கோவிலின் வலப்புற சுவரில் பொருத்தப்பட்டிருந்த சன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்று, அங்கிருந்த 4 உண்டியல்களை, ஒவ்வொன்றாக உடைத்து, 3 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

கோவில் பூசாரி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்டவர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Exit mobile version