இந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் பலியான வழக்கு; கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன்

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த வழக்கில், கிரேன் ஆபரேட்டருக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

 

கமல் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படப்பிடிப்பு, சென்னை அடுத்த பூந்தமல்லியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. அப்போது, கிரேன் சரிந்து விழுந்ததில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 10 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் கிரேன் ஆபரேட்டர் ராஜனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜனுக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version