15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் சிறையில் அடைப்பு!

வந்தவாசி அருகே, 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்களை போக்சோ சட்டத்தின் கீழ் வந்தவாசி காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கம்பன் நகரைச் சேர்ந்த15 வயது சிறுமியிடம் இந்திரா நகரைச் சேர்ந்த இலியாஸ் என்பவர் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்படுத்தியுள்ளார். கடந்த 24 ஆம் தேதி இலியாஸ் தனது நண்பர்கள் பர்க்கத், சூர்யா ஆகிய இளைஞர்களுடன் வந்தவாசி புறவழி சாலையில் உள்ள சவுக்குத் தோப்புக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியை வரவழைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்த பெற்றோர் சிறுமியை வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு மூன்று பேரையும் கைது செய்தனர். மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Exit mobile version