திருவாரூர் அருகேயுள்ள கோயிலில் கடத்தப்பட்ட 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு

திருவாரூர் அருகேயுள்ள கோயிலில் கடத்தப்பட்ட 3 ஐம்பொன் சிலைகளை காவல்துறையினர் மீட்டனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் இருந்த 5 ஐம்பொன் சிலைகள், கடந்த 2017ஆம் ஆண்டு காணாமல் போனது. இதுதொடர்பாக, பேரளம் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு, கோயில் குளத்தில் 2 சிலைகள் மீட்கப்பட்டன. மீதமுள்ள மூன்று சிலைகளை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இதனிடையே, திருவாரூரை அடுத்த சிறுபுலியூர் கிராமத்தை சேர்ந்த அகிலன் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனைதொடர்ந்து, அவர் கொடுத்த தகவலின் படி, 3 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட, 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

 

 

Exit mobile version