கள்ளநோட்டுகள் அச்சடித்த 3 பேர் கைது

திருச்சியில், கள்ளநோட்டுகள் அச்சடித்த 3 பேரை கைது செய்த காவல்துறையினர், 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

திருச்சி கே.கே நகரில், ஒரு வீட்டில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக, ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சோதனை நடத்தியபோது, 500 மற்றும் 1000 ரூபாய் கள்ளநோட்டுகள் அச்சடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளநோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களை கைப்பற்றிய காவல்துறையினர், மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version