கழிவறை கட்டித்தராத தந்தையை கைது செய்யுமாறு 2ம் வகுப்பு மாணவி காவல்நிலையத்தில் புகார்

வேலூர் ஆம்பூர் அருகே வீட்டில் கழிவறை கட்டித்தராத தந்தையை கைது செய்யுமாறு 2ம் வகுப்பு மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரம் பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்தவர் ஹஸ்லானுல்லாஹ். இவரது மகள் ஹனீப்பா ஜாரா. 2ம் வகுப்பு படித்துவரும் ஹனீப்பா ஜாரா, பள்ளி சீருடையுடன் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலைத்திற்கு சென்று புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், எல்.கே.ஜி முதல் தற்போது வரை முதல் ரேங்க் எடுத்து கொண்டிருப்பதாகவும், ஆனால் இதுவரை கழிவறை கட்டித்தராமல் தனது தந்தை ஏமாற்றிக்கொண்டே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எனவே, தனது தந்தையை கைது செய்யுமாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவியின் புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார், நகைச்சுவை உணர்வுடனும், அக்கறையுடனும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Exit mobile version