ஆப்கானில் அரசு கட்டடம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்- 29 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அரசுக்கு சொந்தமான கட்டடம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் பகுதிகளில் அவ்வபோது தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காபூலில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டடம் மீது தீவிரவாதிகல் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில், 29 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து காபூல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version