தமிழகம் முழுவதும் 28 துணை ஆட்சியர்கள் இடம் மாற்றம்

தமிழகம் முழுவதும் 28 துணை ஆட்சியர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

பல்வேறு அலுவல் மற்றும் நிர்வாகப் பணிகளுக்காக 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றிவரும் அதிகாரிகள் இடம் மாற்றப்படுகின்றன. அந்த வகையில் துணை ஆட்சியர்களை இடம் மாற்றியும், புதிய துணை ஆட்சியர்களை பணி நியமனம் செய்தும் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் தனித் துணை ஆட்சியராக சாந்தி, நெல்லை தனித்துணை ஆட்சியராக நந்தீஸ்வரன், நாகை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக நா.வெங்கடேசன் உட்பட 28 துணை ஆட்சியர்களை பணி இடம் மாற்றம் செய்தும், புதிதாக பணி நியமனம் செய்தும் அரசு முதன்மைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Exit mobile version