2060 ல் உலகம் அழியும்- சர் ஐசக் நியூட்டன்

 

2060 ல் உலகம் அழியும் என்று மறைந்த விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் எழுதி வைத்துள்ளது தற்போது வெளியாகியுள்ளது

புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்த அறிவியல் மேதை ஐசக் நியூட்டன் உலக அழிவு குறித்து பதிவு செய்துள்ள குறிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 2060 ஆம் ஆண்டில் உலகம் அழியும் என அவர் கணித்துள்ளார். கிறிஸ்தவர்களின் நம்பிக்கைபடி இயேசுவின் இரண்டாம் வருகையும் அப்போது அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

1643 ஆம் ஆண்டு பிறந்த ஐசக் நியூட்டன், கடவுள் குறித்தும் மதம் தொடர்பிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியத்தை ஆழமாக கற்றுத்தேர்ந்த அவர், அது தொடர்பாக ஏராளமான கட்டுரைகளும் எழுதியுள்ளார். இந்த நிலையில் ஜேஹோவஹ் ஸந்க்ட்ஸ் யூனுஸ் என்ற புனைப்பெயரில் அவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் தான் உலகம் அழியப்போகும் தகவலை நியூட்டன், குறிப்பிட்டுள்ளார் 2060 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகம் மறுபடியும் கடவுளின் தேசமாக மாறும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். நியூட்டனின் இந்த கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version