போதை மாத்திரை கேட்டு மருந்துக்கடையில் தகராறு – 2 இளைஞர்கள் கைது

தாம்பரம் அருகே தனியார் மருந்துகடையில் இளைஞர்கள் சிலர் போதை மாத்திரை கேட்டு தகராறில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாணவர்களும், இளைஞர்கள் சிலரும் போதை மாத்திரைகளுக்கு அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் மருந்துக் கடைகளில் போதை மாத்திரைகளை கேட்டு தகராறு செய்வது வாடிக்கையாகி விட்டது.

இந்தநிலையில், படப்பை பேருந்து நிலையம் அருகே சரவணன் என்பவருக்கு சொந்தமான மருந்துக் கடையில், இளைஞர்கள் சிலர் நைட்ரஜன் என்ற புற்று நோய்க்கு பயன்படுத்தும் மாத்திரையை கேட்டு தகராறு செய்தனர்.

மருத்துவரின் பரிந்துரை இன்றி மாத்திரையை தர முடியாது என கடை உரிமையாளர் சரவணன் கூறியதால், ஆத்திரமடைந்த அவர்கள் கற்களை வீசி கடையை சேதப்படுத்தினர்.

இளைஞர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தகராறில் ஈடுபட்ட சரவணன் மற்றும் அகமதுல்லாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Exit mobile version