தேனி அருகே ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 டிராக்டர்கள் பறிமுதல்

தேனி போடி அருகே ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 டிராக்டர்களை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.

தேனி மாவட்டம் போடியில் மேலப்பரவு பகுதியில் கொட்டகுடி ஆற்றுப்பகுதியில்  அனுமதி இன்றி மணல் கடத்தல் நடைபெறுவதாக வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வட்டாட்சியர் ஆர்த்தி, கொட்டக்குடி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தார். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறனர். மேலும் மணல் கொள்ளையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Exit mobile version