தெலங்கானாவில் இருசக்கர வாகனம் மீது கார் மோதல்; 2 பேர் பலி

தெலங்கானா மாநிலம் திம்மபூர் மண்டலத்தில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்து, அப்பகுதி வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திம்மபூர் மண்டலத்தில் உள்ள கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள நுசுலாப்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சாலை கடக்க முயன்றனர். அப்போது அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியது. காரின் வேகம் காரணமாக பைக்கில் இருந்த இரண்டு பேர் வெகுதூரம் தூக்கி வீசப்பட்டனர்.

இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்தவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சாலையின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

 

Exit mobile version