குஜராத்தில் வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து: 19 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் சூரத் நகர் அருகே வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள சார்தானா என்ற இடத்தில் வணிக வளாக கட்டிடத்தின் ஒரு பகுதியில் மாணவர்களுக்கான பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கட்டிடத்தின் 2ம் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாம் தளம் முழுவதும் தீ பரவியதால் உயிர் பிழைப்பதற்காக 3ம் தளத்தில் இருந்து சிலர் கீழே குதித்துள்ளனர்.

இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version