தனியார் விடுதியில் மது அருந்தி விட்டு அட்டகாசம்: ஐடி நிறுவன ஊழியர்கள் 160 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே தனியார் விடுதியில் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்த தனியார் ஐ.டி நிறுவனத்தை சேர்ந்த 7 பெண்கள் உட்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாமல்லபுரம், புலி குகை அருகே உள்ள தனியார் விடுதியில் ஏராளமான ரவுடிகள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அந்த விடுதியை சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் நள்ளிரவில் சுற்றி வளைத்தனர். அங்கு 7 பெண்கள் உட்பட 153 இளைஞர்கள் மது அருந்தி விட்டு டிஜே எனப்படும் மேலைநாட்டு நடனம் ஆடி அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர். இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அங்கு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் அனைவரும் தனியார் ஐ.டி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் என தெரிய வந்துள்ளது.

Exit mobile version