15 வயது சிறுமியை திருமணம் செய்து 9 மாதம் கர்ப்பம் : சென்னை வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

சென்னை திருமங்கலத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து 9 மாதம் கர்ப்பமாக்கிய வாலிபருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.  

மதுரவாயல் ஆண்டாள் நகரை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து கீழ்பாக்கம் மருத்துவமனையின் சார்பாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண் சிறுமி என்பதால் பாதுகாப்பு இல்லத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை..

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கணவன் கிருபாகரனை போலீசார் தேடி வருகின்றனர்..

Exit mobile version