சபரிமலையில் மேலும் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு

சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 4 நாட்களுக்கு தடையை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து செப்டம்பர் மாதம் சபரிமலையில் பெரியளவில் போராட்டம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் சபரிமலை நடை திறந்த போது 144 தடை உத்தரவு போடப்பட்டது. இத்தடை உத்தரவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், போலீசார் தடை உத்தரவை நீடிக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை அளித்தனர். அதன்படி டிசம்பர் 16 வரை நான்கு நாட்களுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கேரள உயர்நீதிமன்றம் முக்கிய பகுதிகளில் பக்தர்களுக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடிய தடுப்புகளை நீக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version