ஈரோட்டில் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்

ஈரோட்டில் 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றிய விக்னேஷ், மாணவியை ஆசை வார்த்தை கூறி, ஸ்லீப்பர் கோச் பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் சிறுமியை காணாததால் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருப்பூரில் கடத்தி வைக்கப்பட்டிருந்த சிறுமியை காவல்துறையினர் மீட்டனர். மேலும் விக்னேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் உடந்தையாக இருந்த ரமேஷ் மற்றும் ராஜபூபதி ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

 

Exit mobile version