தமிழகம், புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.

12 வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கி வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில், இரண்டாயிரத்து 944 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுத இருக்கின்றனர். சென்னையில் 408 பள்ளிகளில் இருந்து, மொத்தம் 49 ஆயிரத்து 419 பேர் எழுத உள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் முதன்மை விடைத்தாள்கள், கூடுதல் விடைத்தாள்கள் மற்றும் முகப்புச் சீட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.

தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது. ஆசிரியர்களும் தேர்வறையில் செல்போன் வைத்திருக்கக் கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version