+2 மாணவர்களுக்கு மதிப்பெண்‌ வழங்கும்‌ முறை – ஜுலை 31 -ம் தேதிக்குள் வெளியீடு

கொரோனா பெருந்தொற்றின்‌ காரணமாக 2020- 2021 ஆம்‌ கல்வியாண்டில்‌ நடக்கவிருந்த பன்னிரெண்டாம்‌ வகுப்புப்‌ பொதுத்‌ தேர்வுகள்‌ ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டிருந்தது.

10, 11 ஆம்‌ வகுப்புப்‌ பொதுத்‌ தேர்வுகளில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12 ஆம்‌ வகுப்பு செய்முறைத்‌ தேர்வுகள்‌ நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள்‌ வழங்கப்பட்டுள்ள நிலையில்‌, 12 ஆம்‌ வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக்‌ கீழ்க்காணும் விகிதாச்சார அடிப்படையில்‌ வழங்க வல்லுநர்‌ குழு பரிந்துரைத்துள்ளது.

10 ஆம்‌ வகுப்புப்‌ பொதுத்‌ தேர்வில் உயர்‌ மதிப்பெண்‌ பெற்ற 3 பாடங்களுடைய சராசரி 50 சதவிகிதமும் ,11 ஆம்‌ வகுப்புப்‌ பொதுத்‌ தேர்வில் (ஒவ்வொரு பாடத்திலும்‌ பெற்ற எழுத்துமுறை (WRITTEN) மதிப்பெண்‌களை மட்டும் கணக்கிட்டு 20 சதவிகிதமும், 12 ஆம்‌ வகுப்பு செய்முறைத்‌ தேர்வு (PRACTICAL) மற்றும் அ௧ மதிப்பீடு (INTERNAL) அடிப்படையில் 30 சதவீதமும்  மேற்கூறிய முறைகளில்‌ கணக்கிடப்பட்டு, உச்சநீதிமன்ற ஆணைப்படி ஜூலை 31 ஆம்‌ தேதிக்குள்‌ அரசுத்‌ தேர்வுள்‌ துறை இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌.

இம்மதிப்பீட்டு முறையில்‌ கணக்கிடப்படும்‌ மதிப்பெண்கள்‌ தமக்குக்‌ குறைவாக உள்ளதாகக்‌ கருதும்‌ மாணவர்களுக்கு, அவர்கள்‌
விரும்பினால்‌ 12 ஆம்‌ வகுப்பு எழுத்துத்‌ தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும்‌. அவ்வாறு நடத்தப்படும்‌ தேர்வில்‌ அவர்கள்‌ பெறும்‌
மதிப்பெண்ணே அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும்‌.

தனித்தேர்வு எழுதவிருக்கும்‌ மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்றுப்‌ பரவல்‌ சீரடைந்தவுடன்‌, தக்க சமயத்தில்‌ தேர்வு நடத்தப்படும்‌ என்றும் இத்தேர்விற்கான கால அட்டவணை பின்னர்‌ அறிவிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

*12 ஆம்‌ வகுப்பில்‌ ஒவ்வொரு பாடத்திலும்‌ செய்முறைத்‌ தேர்வு (20) மற்றும்‌ அக மதிப்பீட்டில்‌ (10) என மொத்தம்‌ 30-க்குப்‌   பெற்றமதிப்பெண்‌ முழுவதும்‌ கணக்கில்‌ எடுத்துக்கொள்ளப்படும்‌.

*செய்முறைத்‌ தேர்வு இல்லாத பாடங்களில்‌ அக மதிப்பீட்டில்‌ (10) பெற்ற மதிப்பெண்‌ 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு (Extrapolated to 30Marks) முழுவதும்‌ கணக்கில்‌ எடுத்துக்கொள்ளப்படும்‌.

கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 12 ஆம்‌ வகுப்பு செய்முறைத்‌ தேர்வுகளில்‌ பங்குபெு இயலாத
மாணவர்களுக்கு அவர்களின்‌ 11 ஆம்‌ வகுப்பு செய்முறைத்‌ தேர்வுகளில்‌ பெற்ற மதிப்பெண்‌ கணக்கில்‌ எடுத்துக்கொள்ளப்படும்‌.

11 ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு செய்முறைத்‌ தேர்வுகள்‌ இரண்டிலும்‌ பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின்‌ 10 ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 11 ஆம்‌ வகுப்பு எழுத்துத்‌ தேர்வுகளின்‌ அடிப்படையில்‌ 12 ஆம்‌ வகுப்பு செய்முறைத்‌ தேர்வு மதிப்பெண்‌ வழங்கப்படும்‌.

கடந்த ஆண்டு 11 ஆம்‌ வகுப்பு எழுத்துத்‌ தேர்வில்‌ ஏதேனும்‌ பாடங்களில்‌ தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத
நிலை இருந்திருந்தாலோ, அம்மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும்‌ எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக்‌
கருத்தில்கொண்டு, 35 விழுக்காடு மதிப்பெண்‌ வழங்கப்படும்‌.

11 ஆம்‌ வகுப்பு எழுத்துத்‌ தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத்‌ தேர்வு மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு அக மதிப்பீடு, செய்முறைத்‌ தேர்வு ஆகிய தேர்வு நிலைகளில்‌ ஒன்றில்‌ கூட கலந்து கொள்ளாத மாணவர்கள்‌ தனித்‌ தேர்வர்களாகத்‌ தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்‌.

Exit mobile version