அரியலூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் படுகாயம்

அரியலூர் அருகே திருமண வரவேற்பு விழாவிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.

அரியலூர் மாவட்டம் நமங்குணம் அடுத்துள்ள பழமலை நாதபுரம் பகுதியை சேர்ந்த, அனிதா என்பவருக்கும் காசன்கோட்டை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்கு பிறகு மறுவீட்டுக்கு அழைக்க உறவினர்கள் வேனில் பழமலைநாதபுரம் வந்துள்ளனர்.

அப்போது வேனின் ஸ்டியெரிங் பழுதடைந்ததால், வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 12 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version