12 மணி நேரம் கராத்தே செய்து தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை

தற்காப்பு கலையான கராத்தேவை தொடர்ந்து 12 மணி நேரம் செய்து தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயலில் பள்ளி மாணவர்கள், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கு கடந்த 3 வருடங்களாக கராத்தே பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 100 மாணவர்கள் ஒன்றிணைந்து காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை தற்காப்பு கலையான கராத்தேவை 12 மணி நேரம் செய்து காண்பித்து அசத்தினர். மாணவர்களின் சாதனை இந்தியன் வேல்ட் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் உலக சாதனையில் இடம் பெறுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version