இன்று தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகிறார்கள்!

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், இந்த தேர்வை 7 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பாண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த நிலையில் இன்று தொடங்கிய 11ஆம் பொதுத்தேர்வு, ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 180 மையங்களில் 42 ஆயிரத்து 122 மாணவர்கள் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க 3 ஆயிரத்து 100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ன.

Exit mobile version