தவறான சிகிச்சையால் குழந்தை பலி: தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

நெல்லையில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 11 மாத குழுந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

பாளையாங்கோட்டை பகுதியை சேர்ந்த வங்கி ஊழியர் பாபு என்பவர் தனது 11 மாத குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். குழந்தைக்கு மாலை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உண்டானதால் மயக்க ஊசி போட்டதாக தெரிகிறது. ஆனால் ஊசி போட்ட சில நிமிடங்களில் குழந்தை இறந்ததால் பெற்றோர் மற்றும் உறவினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்தநிலையில் தவறான சிகிச்சையல் மட்டுமே குழந்தை இறந்ததாக குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் மருத்துவமனை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு பிறகு குற்றமறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தப் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Exit mobile version