அழகுநிலையத்தில் புகுந்து பணியாளர்களிடம் 10 சவரன் நகை பறிப்பு

சென்னை ரெட்டெரி அருகே அழகு நிலையத்தில் புகுந்து, 10 சவரன் நகையைப் பறித்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை அடுத்த ரெட்டேரியில் சர்வீஸ் சாலையில் உள்ள இயங்கி வரும் அழகு நிலையத்தை, சாவித்திரி என்பவர் நடத்தி வருகிறார். இங்கு 4 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத மர்மநபர்கள், அழகுநிலையத்துக்குள் புகுந்து உரிமையாளர் மற்றும் பணியாளர்களை கத்தியைக் காட்டி, மிரட்டி சுமார் 10 சவரன் நகையைப் பறித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின்பேரில் நகையைப் பறித்துச் சென்ற கார்த்திக், அப்பாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபின் சிறையில் அடைக்கபட்டனர்.

Exit mobile version