ஆட்டோவில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த பெண் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆட்டோ மூலம் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வண்ணாரபேட்டை பகுதியில் ஆட்டோ மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு கடற்கரை காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் உதவி ஆணையர் ஆனந்த குமார் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டதில், ஆட்டோவில் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த டயானா என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணவேணி என்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version