விழித்துக் கொண்ட காஷ்மீரிகள்! பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம்!

காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் கட்டுக்குள் வைத்துள்ளது. அந்த பகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி, பல ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அரசுக்கு எதிராக காஷ்மீரிகள் போராடி வருகின்றனர்.

இதனையொட்டி இன்றும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. காஷ்மீரின் இயற்கை வளங்களை பாகிஸ்தான் சுரண்டுகிறது என்பதே மக்களின் குற்றச்சாட்டு. இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள காஷ்மீர் பகுதிகளுக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வரும் நிலையில், பாகிஸ்தானில் உள்ள காஷ்மீரிகளுக்கே உரிய உரிமைகள் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version