வாழைத் தோட்டத்தில் தீவிபத்து – 2,500 வாழை மரங்கள் எரிந்து நாசம்

தூத்துக்குடியில் மின்கம்பிகள் உரசியதில், 2 ஆயிரத்து 500 வாழைகள் தீயில் கருகி நாசமடைந்தன.

சாத்தான்குளம் அருகே நடுவக்குறிச்சி கிராமத்தில் 4 விவசாயிகளுக்கு சொந்தமான வாழைத்தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் மின்கம்பத்தில் இருந்து ஒரு மின்கம்பி அறுந்து கிடந்தது.

இதில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் தீ பிடித்தது. இந்த தீ அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழைத் தோட்டத்தில் பரவியது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மளமளவென தீ பரவியது. இதில், 2.500க்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் கருகின. தீயணைப்பு வாகனம் உள்ளே சென்று, உடனடியாக தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version