வண்டலூர் பூங்காவின் புதிய வரவு ரோகிணி

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரண்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இரண்டு வயது உள்ள பிர்க்குர்தி என்ற பெண் யானையும் 8 வயதுள்ள அசோக் என்ற ஆண் யானையும் உள்ளது. இதில் 8 வயதுள்ள யானை, வனவிலங்கு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக முகாமிலிருந்து 4 வயதுள்ள ரோகினி என்ற பெண் யானை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு புதிதாக வந்துள்ளது இந்த ரோகிணி பெண் யானையானது 2 ஆண்டுகளுக்கு முன் சத்தியமங்கலம் காட்டில் தாயினால் கைவிடப்பட்ட யானையாகும். 

ரோகிணியை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.

Exit mobile version