ராகுலின் குற்றச்சாட்டு சிறுபிள்ளை தனமானது -ஜேட்லி

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அருண் ஜேட்லி, கடந்த வெள்ளிக்கிழமை பணிக்கு திரும்பினார். இதனை தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை தெரிவித்துள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறும் ராகுல் காந்தியின் கருத்து சிறுபிள்ளைத் தனமானது என அருண் ஜேட்லி கூறினார். 2016ஆம் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு பின்பு, ரூபாய் மதிப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளதாகவும், இதனால் போர் விமானத்தின் மீதான விலை 9 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார். பிரான்ஸ் நாட்டிடம் ஏற்படுத்தப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் அடிப்படையில், 36 போர் விமானங்களும் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்த அருண் ஜேட்லி, இதில் மூன்றாம் நபரின் தலையீடு இல்லை என திட்டவட்டமாக கூறினார்.

Exit mobile version