ரபேல் விவகாரம் – மத்திய கணக்கு தணிக்கைத் துறையிடம் புகாரளிக்க காங்கிரஸ் முடிவு

ரபேல் போர் விமானங்கள் வாங்யதில் ஊழல் நடைபெற்றதாகக் கூறி மத்திய கணக்கு தணிக்கைத் துறையிடம் காங்கிரஸ் கட்சி புகார் அளிக்க உள்ளது.

ரபேல் போர் விமானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு ஆளும் பாஜக அரசு போர் விமானங்கள் வாங்கியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டி வருகிறது.

மேலும் இதில் பிரான்ஸ் நாட்டு அரசு நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனத்தை புறக்கணித்து விட்டு அனுபவம் இல்லாத தனியார் நிறுவனத்திடம் விமானத்தின் பாகங்கள் இணைக்கும் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் குறித்து மத்திய கணக்கு தணிக்கைத்துறை அதிகாரி ராஜீவ் மெஹ்ரிஷியுடம் காங்கிரஸ் கட்சி புகார் அளிக்க உள்ளது.

இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தப்பட உள்ளது. 

Exit mobile version