மும்பை கிரிஸ்டல் டவரில் தீ – 4 பேர் 3உடல் கருகி பலி

கிரிஸ்டல் டவர் கட்டடத்தின் 12வது மாடியில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ மற்ற இடங்களிலும் சூழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 16க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டடத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிநவீன தீயணைப்பு வண்டிகளை கொண்டு தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Exit mobile version