மும்பையில் கன மழை.. இயல்பு வாழ்க்கை முடங்கியது..

கடந்த சில நாட்களாக மும்பையில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக மும்பையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலன கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் சாலைகளின் இருபுறமும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. காந்தி மார்க்கெட், செம்பூர், சயான் பான்வெல் நெடுஞ்சாலை பகுதிகள் பெரும்பாலும் வெள்ளத்தால் மூழ்கி உள்ளன. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல், வீட்டிற்குள்ளயே முடங்கி உள்ளனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version