"முக்கொம்பு அணை 4 நாட்களில் சீராகும்"

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், முக்கொம்பு அணையின் 8 தூண்களும், 9 மதகுகளும் இடிந்து விழுந்தன. இந்நிலையில், தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில், மணல் மூட்டைகளை கொண்டு முக்கொம்பு அணையில், தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணியை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி, தடுப்புகள் அமைக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக தெரிவித்தார். 4 நாட்களில் தடுப்புகள் அமைக்கும் பணி முழுவதுமாக நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version