மீன் பிடிக்கசென்ற 2 மாணவர்கள் பலியான பரிதாபம்

 

சேலம் அருகே குட்டையில் மீன் பிடிக்க சென்ற 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் தாசநாயக்கன்பட்டி ராம் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி சீனிவாசன் என்பவரின் மகன் சஞ்சய் . இவர் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். செளடாம்பிகை நகரை சேர்ந்த ஓட்டுநர் ராஜகோபால் என்பவரின் மகன் மனோஜ் .இவர் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்கள் இருவரும் ஊத்துக்குளி காடு எஸ்.நாட்டார்மங்கலம் தண்ணீர்குட்டையில் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர்.
அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர்.
இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று நீரில் மூழ்கிய சிறுவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version