மதுரை கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு! உறவினர்கள் சாலை மறியல்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள  திருவாதவூரை சேர்ந்த சிந்துஜா, தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தார்.

அவர் தன்னுடன் படிக்கும்  ராம்குமார் என்ற மாணவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களின் காதலுக்கு ராம்குமாரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால்,   ராம்குமார், காதலியை கைவிட்டதாகவும்,  இதனால் மனமுடைந்த மாணவி சிந்துஜா எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக சொல்லப்படுகிறது. 

இதனையடுத்து சிந்துஜாவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி சிந்துஜா உயிரிழந்தார்.

மாணவியின் தற்கொலைக்கு ராம்குமாரும், அவரது குடும்பாத்தாரும் காரணம் என கூறியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாணவியின் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version