பெரியார் திருவுருவப்படத்திற்கு துணை முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

தந்தை பெரியாரின் 140வது பிறந்த நாளை ஒட்டி அவரது திருவருவப் படத்திற்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கப்படும் தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சென்னை அண்ணா சாலையில், அண்ணா மேம்பாலப் பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோன்று, பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா. வளர்மதி, ஜெயவர்தன் எம்.பி. மற்றும் அதிமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

Exit mobile version