பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் – முகுல்வாஸ்னிக் குற்றச்சாட்டு

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்களிடம் இருந்து 11 ஆயிரம் கோடி ரூபாய் சுரண்டப்பட்டுள்ளதாக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் முகில்வாஸ்னிக் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து முரணான தகவல்களை பதிவு செய்து வருவதாகவும் முகில்வாஸ்னிக் விமர்சித்துள்ளார். 526 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டிய போர் விமானத்தை ஆயிரத்து 670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

Exit mobile version