புரட்டாசி மாதம் தொடங்கியதையடுத்து பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாதத்தின் முதல் நாளையொட்டி கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும், தாயாரையும் சேவித்தனர்.

வரும் வெள்ளிக்கிழமை இக்கோயிலில் திருத்தேர் விழா நடைபெறவுள்ளது. அடுத்தடுத்து வரும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி மருத்துவ வசதி ஆகியவற்றை இந்துசமய அறநிலையத்துறை செய்து வருகிறது.

Exit mobile version