புதிய தூய்மை திட்டம் – பிரதமர் அறிவிப்பு

கடந்த 2014-ம் ஆண்டு காந்தி பிறந்ததினமான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்நிலையில் புதிய தூய்மை திட்டத்தை மத்திய அரசு துவக்க திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என்ற பெயரில் பிரதமர் மோடி வருகிற 15-ம் தேதி துவங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, காந்தி பிறந்த 150-வது ஆண்டு விழாவையொட்டி முன்னதாக வரும் 15-ம் தேதி “தூய்மையே உண்மையான சேவை” என்ற திட்டத்தை நாம் துவங்குகிறோம். அன்றைய தினம், தூய்மை இந்தியா திட்டத்தில் அயராது உழைத்து வரும் தொண்டர்களுடன் கலந்துரையாடுவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். இந்த திட்டத்தில் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இது தேசதந்தைக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என தெரிவித்துள்ளார்.

Exit mobile version