பழிக்கு பழியாக நடந்த கொலையை மொபைலில் படம் பிடித்த பொதுமக்கள்

 

ஐதராபாத்தில், போலீசார் கண்முன்பே, ரவுடி ஒருவர், கோடாரியால் வெட்டி படுகொலை ,செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதரபாத் அருகே உள்ள உப்பர் ஹள்ளி நகரில் பட்டப் பகலில் பொதுமக்கள் கண்முன்பாக ஒருவர் இன்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். காவலர்கள் அங்கு இருந்த போதே இந்த சம்பவம் நடந்ததால் பெரும் பதட்டம் நிலவியது.

ஐதராபாத் அருகே உள்ள ராஜேந்திர நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் மீது மகேஷ் என்பவரை கொலை செய்ததாக வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணை உப்பர் ஹள்ளி நீதிமன்றதில் நடைபெற்று வருகிறது.

இந்த விசரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு ரமேஷ்,சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 4 பேரில் ஒருவர், கோடாரியால் ரமேஷை சரமாரியாக வெட்டினார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த போலீசார் தடுக்க முயன்றனர். ஆனால் கொலை வெறியில் இருந்த அந்த நபர் அவர்களை அருகே வர விடாமல் கோடாரியை சுழற்றினார். இதனால் அவர்களால் கொலையை தடுக்க முடியவில்லை. உடல் முழுவதும் வெட்டுப்பட்ட ரமேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார்.

மகேஷ் கொலை தொடர்பாக கோபத்தில் இருந்த அவரது தந்தை உள்ளிட்ட உறவினர்கள் தான் பழிக்கு பழியாக ரமேஷை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பழிக்கு பழியாக நடந்த கொலையை அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் மொபைலில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version