நீதிபதி முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட மரகதலிங்கம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள அழகு சமுத்திரம் என்ற இடத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மரகதலிங்கம் கடத்தப்பட்ட போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அதை பறிமுதல் செய்தனர். சிலை கடத்தலில் தொடர்புடைய வள்ளி உட்பட 5 பேரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

மரகதலிங்கத்தை ஓமலூர் நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.இதையடுத்து 18 மாதங்களுக்கு பிறகு இன்று ஓமலூர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் லிங்கம் பெட்டியில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணத்தில் உள்ள தனி நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

Exit mobile version