நடிகர் விஜய்குமார் மகள் மீது போலீசில் புகார்!

நடிகர் விஜயகுமார், தனது மகள் வனிதா மீது சென்னை மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளார். மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. திரைப்படங்கள் எடுப்பதற்காக அந்த வீடு வாடகைக்கு விடப்படுகிறது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விஜயகுமார் மகள் வனிதா சினிமா படப்பிடிப்பு நடத்துவதாகக் கூறி அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அவர் வீட்டை காலி செய்யவில்லை.

வீட்டில் தனக்கும் பங்கு உள்ளதால் வீட்டை காலி செய்ய முடியாது என விஜயகுமாரிடம் வனிதா கூறியதாகத் தெரிகிறது. இதுகுறித்து மதுரவாயல் போலீசில் விஜயகுமார் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக விசாரிக்க மதுரவாயல் போலீசார் அந்த வீட்டிற்குச் சென்றனர். இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை வனிதா தகாத வார்த்தைகளால் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Exit mobile version