தெலங்கானாவை சோகத்தில் ஆழ்த்திய விபத்து – 45 பேர் பலி

தெலங்கானா மாநிலம் கொண்டாகட்டு என்ற இடத்தில் அரசு பேருந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா அரசு பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கொண்டாகட்டு என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது.

பாறைகளில் மோதியதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. இதில் 10 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிசிக்கை பலனின்றி பலர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. 

Exit mobile version